search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனை விதை"

    • பனை விதைகள் விதைப்பு பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகைராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி ஊராட்சியில் அனந்தபத்மநாயக்கன் குளக்கரையில், தளிர் திப்பணம்பட்டி கிராமம் அமைப்பு சார்பில் 1,500 பனை விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். ஊராட்சி வார்டு உறுப்பினர் தமிழ்ச் செல்வி, ஊராட்சி செயலர் பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் நிலக்கிழார் ரவிசுப்பிரமணியன், முத்துராமன், வெங்கடாம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகைராஜன் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடு களை தளிர் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் சதீஷ்குமார், அனீத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பனை விதை நடவு விழா நடந்தது.
    • முடிவில் பேராசிரியர் கருப்புராஜ் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விசாலயன்கோட்டை கிராம ஊராட்சி இணைந்து சேது பாஸ்கரா கல்விக் குழுமத்தலைவர் முனைவர் சேதுகுமணன் ஏற்பாட்டில் ஆயிரம் பனை விதைகள் நடவு விழா நடைபெற்றது.

    விசாலயன்கோட்டை வேதமுத்து நகரில் தொடங்கி வேளாண்மைக் கல்லூரி வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சொர்ணம் வரவேற்றார்.

    சேதுபாஸ்கரா கல்லூரி முதல்வர்.க.கருணாநிதி, சேது வள்ளியம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் சேது விவேகானந்தன் முன்னிலை வகித்தனர். கல்லல் ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், முன்னாள் தலைவர் அசோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பனை மரத்தின் சிறப்புகள், பனை விதை நடவு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதன்மை செயல் அதிகாரி கோவிந்தராம், ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகேசன், பேராசிரியை விஷ்ணுபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் கருப்புராஜ் நன்றி கூறினார்.

    • பெரியகுளத்தில் 30 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடை பெற்றது.
    • கலெக்டர் ரவிசந்திரன், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் பனை விதைகளை நட்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகுளத்தில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் ஏற்பாட்டில் 30 ஆயிரம் பனை விதை நடும் நிகழ்ச்சி யின் தொடக்க விழா நடை பெற்றது.

    ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிசந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு பனைமரத்தின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு நெட்டூர் ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் கணே சன், திலக ராஜ் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், முத்தையா, விவசாய சங்க தலைவர் முப்புடாதி, செயலாளர் வேலாயுதம், கணேசன், அருணாசலபுரம் இசக்கி துரை, வார்டு உறுப்பினர் கணேசன், ஊராட்சி செயலாளர் அறுமுகப் பாண்டியன், இளம் தளிர் பூ உலகை காப்போம், பொழில், நம்மாழ்வார் நடுவர் அமைப்பு தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மண்டபம் அருகே மானாங்குடியில் 10 ஆயிரம் பனை விதை நடும் பணி தொடங்கியது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மானாங்குடி ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் 10 ஆயிரம் பனை விதை நடும் பணி தொடங்கியது.

    காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பனை மர விதைகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் முஹமது சலாவுதீன், மாவட்ட தலைவர் ராஜ கோபால், துணை தலைவர் பத்ம நாபன், ராமநாதபுரம் நக ராட்சி தலைவர் கார்மே கம், துணை தலைவர் பிர வீன், புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், இருமேனி ஊராட்சி தலை வர் சிவக்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரவீன், ராம நாதபுரம் நகராட்சி கவுன்சி லர் ஜஹாங்கீர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அதைதொடர்ந்து மானாங்குடி ஊராட்சி நாக நாதர்கோவில்- சின்னுடை யார்வலசை வரை ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலையை மக்கள் பயன் பாட்டிற்கு காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி பத்மநாபன், துணை தலைவர் புஷ்பம் மேகநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தமிழ்குமார், உஷா நந்தினி, ரஞ்சிதம், ஜோதி, நித்யா, ஊராட்சி செயலர் கருணாமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் 700 பனை விதைகளை சேகரித்தனர்.
    • தமிழக கடற்கரைப்ப குதிகளில் வளர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    திருமங்கலம்

    பனை மரம் தமிழர்களின் சமூக பண்பாட்டு வாழ்வி லும், வரலாற்றிலும், பொரு ளியலிலும் 2,000 ஆண்டுக ளுக்கும் மேலாக தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனை தமிழக கடற்கரைப்ப குதிகளில் வளர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    மீனவர்கள் குடியிருப்பு கள், துறைமுகங்கள், உயிரி யல் பூங்கா, அரிய வகை மீன்கள், நீர்வாழ் உயிரினங் களை காக்கும் வகையிலும், இயற்கை சீற்றங்களின் பாதிப்புகளை குறைக்கும் வகையிலும், காலநிலை மாற்றத்தினை தணிக்கும் வகையிலும் ஒரு கோடி பனை விதைகளை பதிய மிட்டு பாதுகாக்கும் பணி களை தமிழக அரசு முன்னெ டுத்து செய்து வருகிறது.

    இந்த பணிக்கு உதவி புரியும் வகையில் திருமங்க லம் அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நல பணித் திட்டத்தின் சார்பாக திட்ட அலுவலர் முனியாண்டி தலைமையில் மாணவர்கள் சிந்து பைரவி, அனிதா, அக்குமாரி, அருந்ததி, பக வதி கண்ணன், மருது பாண்டி, தங்கராஜ், மணி கண்டன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டு நலப் பணித்திட்ட மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ராயபாளையம் மற்றும் திறளி ஆகிய கிராமங்களுக்கு சென்று சுமார் 700-க்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்தனர்.

    அந்த விதைகளை கல் லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் செந்தில் குமார் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் பாண்டி ஆகியோரிடம் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலு வலர் முனைவர் முனி யாண்டி, முனைவர் சிங்க ராஜா ஆகியோர் முன்னிலையில் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் வழங்கினார்.

    பனை விதைகளை பெற்றுக் கொண்ட மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் செந்தில் குமார் மற்றும் மதுரை காம ராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாண்டி ஆகியோர் அன்னை பாத்திமா கல்லூரி நிர்வாகத்திற்கு பாராட்டு களை தெரிவித்தனர்.

    • தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பனைமர தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் இந்த விதையானது செப்டம்பர் மாதம் 24 - ந் தேதி என்.எஸ் எஸ். தினத்தன்று தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.

    இன்று இந்த திட்டத்தின் ஆலோசனை கூட்டம் தண்டையார்பேட்டையில் வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழக மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, கொள்கை பரப்புச் செயலாளர் முனீஸ்வரன், வர்த்தகர் அணி செயலாளர் சுப்பையா, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை, சமூக முன்னெடுப்பு தலைவர் மற்றும் தமிழ்நாடு தன்னார்வளர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன், நாடார் பேரவை மாநில துணைத் தலைவர் முருகேசன், இளைஞர் அணி துணைச் செயலாளர் கண்ணன், பால சேகர், நாடார் பேரவை மகளிர் அணி துணைச் செயலாளர் கல்பனா,

    திருவள்ளூர் மாவட்டம் மீனா ராஜபுஷ்பம் கலையரசி வடசென்னை மாவட்டம் குணசுந்தரி ஆனந்தி விஜயலட்சுமி அனிதா வடசென்னை கிழக்கு மாவட்டம் லார்டு பாஸ்கர் கே கே சீனிவாசன் தங்கத்துரை ராஜேஷ் வட சென்னை மேற்கு மாவட்டம் வில்லியம்ஸ் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மதுரை வீரன் கிழக்கு மாவட்டம் விஜயன் திருவள்ளூர் அந்தோணி சுபாஷ் சுரேஷ் காஞ்சிபுரம் ரமேஷ் செல்வ ராஜ் ஸ்ரீராம் செங்கல்பட்டு சேகர் தென் சென்னை துரை மாணிக்கம் மத்திய சென்னை தேவேந்திரன் அருண்குமார் ராஜலிங்கம் ஈரோடு கோதண்டராமன் தஞ்சாவூர் செல்லதுரை கனகராஜ் விருதுநகர் மாரிமுத்து கரூர் ரமேஷ் மணி திருவாரூர் காளிமுத்து திருப்பூர் ஆத்திச்செல்வம் விழுப்புரம் முருகன் திண்டுக்கல் குரு பாண்டியன் தேனி சுரேஷ் காரைக்கால் விஜய் திருச்செங்கோடு சுரேஷ் பூமணி மற்றும் அனைத்து பகுதிகளில் இருந்து நாடார் பேரவை சமத்துவ மக்கள் கழகத்தினுடைய நிர்வாகிகள் பனைமர தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.
    • பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது.

    பொன்னேரி:

    தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப் பணி திட்டம் அமைப்புகள் இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை 14 மாவட்டங்களில் தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 24-ந்தேதி என்எஸ்எஸ் தினத்தன்று தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முன்னோடியாக பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் டி சிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள், எலைட் பள்ளி தாளாளர் மற்றும் மாணவர்கள், கிரீன்நீடா அமைப்பினர்கள் கலந்து கொண்டு 1லட்சம் அளவிலான பனை விதைகளை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சேகரித்தனர். நிகழ்ச்சியில் எலைட் பள்ளி தாளாளர் ஜெபாஸ்டின்

    பனைமர தோட்ட உரிமையாளர் அகிலன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் வழக்கறிஞர் கண்ணன், முனிஸ்வரன், தங்கமுத்து, ஜெபராஜ்டேவிட், சீனிவாசன், ராஜேஷ், மோகன்ராஜ், தாஸ், சதீஷ், ரமேஷ், சங்கர பாண்டியன், வேல்முருகன், சண்முகசுந்தரம், சுடலை மணி, பாக்கியராஜ், ஆனந்த லிங்கம், சஞ்சீவராஜன், மகளிர் அணி கல்பனா, குணசுந்தரி, ஆனந்தி, விஜயலட்சுமி, அனிதா, ராஜேஸ்வரி கிரீன்நீடா அமைப்பின் சந்தான கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.
    • பனைவிதைகளை ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் நட்டு தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் யூனிய னுக்குட்பட்ட கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தலைமை தாங்கி பனைவிதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    மேட்டூர் - தோரணமலை செல்லும் சாலையில் சுமார் 800 பனைவிதைகள் நடப்பட்டது.இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன் ராணி, வேளாண்மை அதிகாரி அபிராமி, இணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, தொழில் நுட்ப அதிகாரி கிருஷ்ணமூர்த்தி , கடையம் பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தெற்குத்தரவை ஊராட்சியில் பனை விதைகள் நடவு செய்யும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 36 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தெற்குத்தரவை ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மூலம் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடக்க விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெற்குத்தரவை ஊராட்சியில் அம்மன் கோவில் ஊரணி மற்றும் வைரவன் கோவில் பகுதியில் பனை விதைகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து தெற்குத்தரவை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் அனைத்து துறையின் திட்டங்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருவதை பார்வையிட்டு, ஊராட்சி யின் வளர்ச்சிக்காக இத்தகைய திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். பின்னர் ஊரக வளர்ச்சித் துறை, குழந்தைகள் வளர்ச்சித்துறை, மீன்வளத் துறை, வேளாண்மை துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மூலம் 36 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட அலுவலர் குமரேசன், பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப் பெருமாள், தெற்குத்தரவை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சாத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.
    • பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் பூமியில், பணிக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம், வனம் இந்திய அறக்கட்டளை.

    மற்றும் பொதுமக்கள் இணைந்து 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 7500 பனை விதைகள், 750 மாணவர்கள் மூலம் நடும் விழா நடைபெற்றது.இதில் பணிக்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரோஜா மணி ஈஸ்வரன், வனம் அமைப்பின் நிர்வாகிகள் சுந்தர்ராஜன்,நாச்சிமுத்து, டி.எம்.எஸ்.பழனிச்சாமி, மற்றும் அருள்புரம் ஜெயந்தி பள்ளி மாணவர்கள், பணிக்கம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வான்தீவு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு பனைமர விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.
    தூத்துக்குடி :

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இதில் 2 தீவுகள் ஏற்கனவே கடலில் மூழ்கிவிட்டன. மேலும் தூத்துக்குடி பகுதியில் உள்ள வான்தீவு கடலில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டது. இதனை பாதுகாக்க வான்தீவு பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு பனைமர விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. வான் தீவு மற்றும் குருசடை தீவு பகுதியில் இந்த விதைகள் முளைத்து தற்போது ஒரு அடி முதல் 2 அடி வரை வளர்ந்து உள்ளன.

    இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் குருசடை உள்பட 10 தீவுகளில் பனைமர விதைகளை நடவு செய்யும் பணி விரிவுபடுத்தப்பட்டது. சீசன் காலத்தில் பனைமர விதைகளை சேகரித்து படகுகள் மூலம் தீவு பகுதிகளுக்கு கொண்டு சென்று நடவு செய்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 10 தீவுகளிலும் சுமார் 25 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் கடல் அரிப்பை தடுத்து தீவுகள் மூழ்குவதை தடுக்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ×